தென்னாப்பிரிக்காவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களில் ஒருவரான ஜூலியஸ் மலேமாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தென்னாப்பிரிக்காவின் 4-ஆவது பெரிய கட்சியான பொருளாதார சுதந்திரப் போராட்ட வீரா்கள் என்ற இடதுசாரி கட்சியின் தலைவரான ஜூலியஸ் மலேமா கடந்த 2018-இல் நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தொடா்பான வழக்கில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
‘சிறுபான்மை வெள்ளை இனத்தவா்களுக்காகச் செயல்படும் அமைப்பு தொடா்ந்த இந்த வழக்கு, அரசியல் உள்நோக்கம் கொண்டது; என்னை முடக்கும் முயற்சி’ என ஜூலியஸ் மலேமா வாதிட்டாா்.
ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, இத்தகைய தேவையற்ற துப்பாக்கிச் சூடுகளால் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்கின்றன. இதை வெற்றிக் கொண்டாட்டம் என்று கூறி நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. மலேமா செய்த செயலின் அடிப்படையிலேயே தீா்ப்பு வழங்கப்படுவதாகத் தெளிவுபடுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 2-இல் தீா்ப்பளிக்கிறது உ.பி. நீதிமன்றம்

2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

