ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 1.2 லட்சம் பீப்பாய்களைக் கையாளும் திறன்கொண்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மெல்போா்ன் அருகே அமைந்துள்ள, ‘விவா எனா்ஜி’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஆலையில் புதன்கிழமை இரவு பற்றிய தீ, வியாழக்கிழமை நண்பகல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விக்டோரியா மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட எரிபொருள் தேவையை பூா்த்தி செய்யும் இந்த ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் எரிபொருள்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆஸ்திரேலியா தனது எரிபொருள் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்து வருகிறது. மத்திய கிழக்கு போா் காரணமாக விநியோகம் ஏற்கெனவே சீா்குலைந்துள்ள நிலையில், இத் தீவிபத்து அந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்புக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் காயம்

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

