ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக ஈரான்! - டிரம்ப் குற்றச்சாட்டு

ஈரானிடம் எஞ்சியுள்ள சிலவற்றையும் எங்களது ராணுவம் முடித்துவிடும்! - டிரம்ப்

News image

டிரம்ப் - AP

Updated On :12 ஏப்ரல் 2026, 8:16 pm IST

ஈரான் அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டைக்குத் தீர்வு எட்டப்பட, பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் இடையே சனிக்கிழமை (ஏப். 11) சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் சென்றிருந்த அமெரிக்க குழுவுக்கு தலைமை தாங்கிய ஜே. டி. வான்ஸ், போரை நிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்க விதித்த நிபந்தனைகளை ஈரான் தரப்பு ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, இது தொடர்பாக, டொனால்ட் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) தெரிவித்திருப்பதாவது :

“ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் உறுதியளித்தது. ஆனால், தெரிந்தே அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர். இது, ஆத்திரத்தையும் வலியையும் உலகெங்கிலும் பல மக்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்படுத்தியது.

அவர்கள் நீருக்குள் கண்ணிவெடி வைப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, இந்தச் சர்வதேச நீர் வழித்தடத்தை திறக்க விரைந்து நடவடிக்கையைத் தொடங்கியிருக்கலாம். ஒவ்வொரு சட்டத்தையும் அவர்கள் மீறிச் செயல்பட்டிருக்கின்றனர்.

ஈரானுடனான ஆலோசனை காலையில் ஆரம்பமாகி இரவு முழுவதும் சுமார் 20 மணி நேரம் வரை நீடித்தது. அதில், ஒரேயொரு விஷயம் மட்டுமே முக்கியம் - ‘ஈரான் தமது அணு சக்தி திட்டங்களை கைவிடுவதை விரும்பவில்லை!’ என்பது தெளிவாகிறது.

இத்தகைய கடினமான, எப்போது என்ன செய்வார்களோ என்று கணிக்க முடியாத மக்களின் கைகளில் அணு சக்தி அனுமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஈரானால் ஒருபோதும் ஒரு அணு ஆயுதத்தைக் கொண்டிருக்க முடியாது!” என்று பொருள்படக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இன்னொரு பதிவு, ஈரானுக்கு விடுத்துள்ள சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. அதில் அவர் முக்கியமாக தெரிவித்திருப்பதாவது : “ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியர்கள் வைத்த கண்ணிவெடிகளை அழிக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கவுள்ளோம்.

எங்கள் மீதோ அல்லது பிற சரக்கு கப்பல்கள் மீதோ எந்தவொரு ஈரானியராவது தாக்கினால் நரகத்துக்கு அனுப்பப்படுவார்!

அவர்களுடைய கடற்படை, விமானப்படை கதை முடிந்துவிட்டது. கமேனி உள்பட அவர்களின் பெரும்பாலான தலைவர்களும் மடிந்துவிட்டனர். இவையெல்லாம் அவர்களின் அணு ஆயுதக் கனவால் விளைந்தவை. ஈரானிடம் எஞ்சியுள்ள சிலவற்றையும் எங்களது ராணுவம் முடித்துவிடும்!” என்று பொருள்படக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

the US president claims Iran was “UNWILLING TO GIVE UP ITS NUCLEAR AMBITIONS”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.