பூமியை அச்சுறுத்துவது தட்ப வெப்பநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும்தான். இந்த நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதற்கான காரணம் "க்ரீன்ஹவுஸ் வாயுக்கள்' எனப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, மெதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன மிக அதிக அளவில் உற்பத்தியாகி வளிமண்டலத்தில் கலப்பதால்தான்.
"வாகனப் பயன்பாட்டைக் குறையுங்கள். படிம எரிபொருளான டீசல், பெட்ரோலை குறைவாகப் பயன்படுத்துங்கள்' என்று விஞ்ஞானிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ஓர் அதிசயக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக இத்தாலியில் உள்ள ஒரு எரிமலைத் தீவுக்குச் சென்றனர்.
அங்கு எரிமலை வெடிப்பானது நீருக்கு அடியில் ஏராளமாக கார்பன் டை ஆக்ஸைடை கரைத்திருக்கும் என்பதாலும் இந்த நிலை சயானோபாக்டீரியா (நீலப்பசும் நுண்ணுயிரி) என்ற பாக்டீரியாவை வளர்க்க உதவும் என்று அவர்கள் திட்டமிட்டனர். அங்கு அவர்கள் "யூ.டி.இ.எக்ஸ். 3154', "யூ.டி.இ.எக்ஸ். 3222' ஆகிய இரு புதிய பாக்டீரியாக்களைக் கண்டனர்.
இதில் "யூ.டி.இ.எக்ஸ்.3222' என்ற பாக்டீரியா மிகப் பெரியதாக இருந்தது. இதற்கு "சாங்கஸ்' என்ற பெயரை அவர்கள் சூட்டினர். இதுகுறித்து ஆய்வுக் குழுத் தலைவரான மாக்ஸ் ஷூபெர்ட் கூறியது:
'இந்த பாக்டீரியாவால் தட்பவெப்ப மாறுதலைத் தடுக்க முடியும். இது ஒருவகை பாசி (ஆல்கா) ஆகும். கார்பன் டை ஆக்ஸைடை மிக அதிக அளவில் உறிஞ்சி விடும். அதிக அடர்த்தி கொண்ட இந்த பாக்டீரியா வெகு வேகமாக வளரும். வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை அமோனியாவாக மாற்றும் வல்லமை படைத்தது.
புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் சக்தியைக் கொண்டது. இதை பெரிய அளவில் உருவாக்கி, "க்ரீன் கேஸ் வாயுக்கள்' எனப்படும் பசுமை வாயுக்களின் நச்சுத் தன்மையை அழிக்க முடியும்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஏ.ஐ. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு துறையில் புதிய சவால்’ - தலைமை பொருளாதார ஆலோசகா்

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.82! 14 காசுகள் சரிவு!

சென்னையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினையாக ‘எறும்புத் தின்னிகள்’
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

