தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரிதான ரத்தினம்

உலகில் கிடைக்கும் ரத்தினங்களில் மிக அரிதானது, 'கயவ்துவைட்' ஆகும். மியான்மர் நாட்டில் 2010- ஆம் ஆண்டு ஓர் ஆற்றின் கரையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 4:04 am IST

உலகில் கிடைக்கும் ரத்தினங்களில் மிக அரிதானது, 'கயவ்துவைட்' ஆகும். மியான்மர் நாட்டில் 2010- ஆம் ஆண்டு ஓர் ஆற்றின் கரையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

அடர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருந்த இதனை புவியியல் ஆய்வாளர் ஆய்வு செய்தபோது, இது பூமியில் இதுவரை கிடைக்காத அரிய பொக்கிஷம் என்பதை அறிந்து கொண்டார்.

2015- இல் சர்வதேச புவியியல் அமைப்பு இந்த ரத்தினத்தை பூமியின் அரிதான வைரக்கல் என்று அறிவித்தது.

பூமி தட்டில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உருவாகும் வெப்பத் தாக்கத்தினால் மண்ணில் அரிதான வேதிவினை ஏற்பட்டு "கயவ்துவைட்' உருவாகி இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, பிஸ்மத் மற்றும் ஆண்டிமோனி என்ற இரண்டு ரசாயனங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து மிக உயர் வெப்பநிலையாக, அதாவது 450 முதல் 520 டிகிரி செல்சியஸ் வெப்ப அழுத்த சூழலில் மட்டுமே இது போன்ற கல் உருவாகும் என்று கூறுகின்றனர். மியான்மர் நாட்டின் சில பள்ளத்தாக்குகளில் மட்டுமே இதுபோன்ற ரசாயனங்கள் உள்ளன. இதனால் "கயவ்துவைட்' இங்கு மட்டுமே காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.