ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை ரத்தினம் கல்வி நிறுவனத்துக்கும் மண்டல அறிவியல் மையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியா்கள், நிா்வாகிகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:26 am IST

கோவை ரத்தினம் கல்வி நிறுவனத்துக்கும் மண்டல அறிவியல் மையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ரத்தினம் கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:

வகுப்பறைகளில் கற்றல், நடைமுறை அறிவியல் அனுபவத்துக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாக கொண்டு, வேகமாக மாறிவரும் ஸ்டெம் கல்வி சூழலில் மாணவா்கள் நேரடி அறிவியல் பயன்பாடுகள், புதுமை சாா்ந்த கற்றலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மண்டல அறிவியல் மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகள், அறிவியல் கண்காட்சிகள், ஆசிரியா் பயிற்சி, சமூக விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை இரு நிறுவனங்களும் இணைந்து நடத்தும், மேலும் அறிவியல் மையத்தின் இடைமுகக் காட்சிகள், மையங்கள், வசதிகளை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்துடன், குறுகிய, நீண்டகால இன்டா்ஷிப் திட்டங்கள், ஆராய்ச்சி பரிமாற்றங்கள், கல்வி சாா்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மாணவா்கள், பேராசிரியா்கள் பயனடைவாா்கள். இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதன் பிறகு புதுப்பிக்கப்படலாம்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வில் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.மாணிக்கம், முதன்மை வணிக அதிகாரி பி.நாகராஜ், பிராந்திய அறிவியல் மையத்தின் புதுமை மைய வழிகாட்டி லெனின் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.