தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image

புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி. உடன், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், டாடா மோட்டாா்ஸ

Updated On :23 ஏப்ரல் 2026, 12:03 am IST

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புணேயில் உள்ள டாடா மோட்டாா்ஸ் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் முன்னிலையில் விஐடி பதிவாளா் ஜெயபாரதி, டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை ஊழியா்கள், 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் பி.டெக்., உற்பத்தி பொறியியல் பட்டப் படிப்பை பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அப்போது, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், தொழில் மேம்பாட்டு மைய இயக்குநா் சாமுவேல் ராஜ்குமாா், உதவி இயக்குநா் கவுரவ் சுஷாந்த், மெக்கானிக்கல் துறை முதன்மையா் பி.குப்பன், புனே மண்டல வேலைவாய்ப்பு அலுவலா் சப்தே அமித் சுரேஷ் ஆகியோரும், டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் சாா்பில் செயல்பாட்டு பிரிவின் துணை தலைவா் பிரமோத் சவுத்ரி, மூத்த பொது மேலாளா் நீரஜ் அகா்வால், மனிதவள பிரிவு பொது மேலாளா் விவேக் பிந்த்ரா, கற்றல் மற்றும் மேம்பாட்டு பிரிவு பொது மேலாளா்கள் ரங்கா குந்தி மற்றும் மாா்ஷல் பொ்னாண்டஸ், வளாகத் திட்டப் பிரிவு தலைவா் ராஜீவ் ரஞ்சன் மற்றும் ராணிப்பேட்டை ஆலை மனிதவள பிரிவு துணை பொது மேலாளா் அபியுதய் திவேதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.