தான் கற்ற பரதக் கலையை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் கற்றுத் தருவதோடு, அரங்கேற்றமும் செய்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நாற்பத்து இரண்டு வயதான வி.ஜாஸ்மின்.
நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட சேந்தமங்கலம் அருகே காளப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:
'தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று பரதம். இதனை கற்றுக் கொள்வதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் மிகுந்த ஆர்வம் கொள்வர். அன்று முதல் இன்று வரை தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பரதக் கலைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
நான் பிறந்தது கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காடு. தந்தை மர வியாபாரம் செய்து வந்த நிலையில் பிழைப்புக்காக நாங்கள் எங்கள் குடும்பத்தோடு இங்கு வந்து, சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் வசித்தோம். எனது ஆறாம் வயதில் பரதக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. கரூரைச் சேர்ந்த சிவலோகநாதனிடம் பரதம் கற்றேன்.
பின்னர், என்னைப்போல் இந்தக் கலையை ஆர்வமுடன் கற்க விரும்பும் கிராமப்புற மாணவிகளுக்கு பரதத்தை கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.
தொடக்கத்தில் சிலரே வந்த நிலையில், தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்றுவருகின்றனர். மாணவிகள் ஆர்வமுடன் பரதம் கற்பது மட்டுமின்றி, தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். பரதநாட்டியம் என்பது அனைவரும் கற்கலாம்.
தற்போதைய நிலையில் ஆறு வயது முதல் முப்பது வயது வரையிலான பெண்கள் என்னிடம் பரதம் கற்று வருகின்றனர். நாட்டியக் கலைக்கு வயது தடையில்லை'' என்கிறார் ஜாஸ்மின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்கு

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
