மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சுவை அதிகரிக்க...

கேசரி செய்யும்போது இரண்டு எலுமிச்சம் பழத்தைப் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டால், கேசரியின் சுவை கூடுதலாக இருக்கும்.

News image

பீட்ரூட்

Updated On :21 ஜூன் 2026, 4:00 am IST

அமுதா அசோக்ராஜா

கேசரி செய்யும்போது இரண்டு எலுமிச்சம் பழத்தைப் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டால், கேசரியின் சுவை கூடுதலாக இருக்கும்.

கிரேவி செய்யும்போது தக்காளியுடன் சிறிது பீட்ரூட்டையும் சேர்த்து அரைத்து கொதிக்கும் கிரேவியில் ஊற்றினால், கிரேவி திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.

தேன் குழல் செய்யும்போது, அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கலந்தால், அது மிகவும் சுவையாக இருக்கும்.

எலுமிச்சைச் சாதம் செய்யும்போது, சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக் கலந்தால் சாதம் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்கிப் பின்னர் குழம்பில் சேர்த்தால் பிசுபிசுப்பின்றி குழம்பு சுவையாக இருக்கும்.

புளிக்குழம்பு நல்ல வாசனையாக இருக்க, நல்லெண்ணெய்யை கொஞ்சம் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

இடியாப்பம் மென்மையாக இருக்க, அரிசி மாவில் சிறிது தேங்காய்ப் பால் சேர்த்துப் பிசைய வேண்டும்.

இரவு ஒரு தேக்கரண்டி ஓமத்தைத் தண்ணீரில் போட்டு காலையில் அதை வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால், உடல் பருமன் குறையும்.

காலை உணவைத் தாமதமாகச் சாப்பிடக் கூடாது. சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதே உடல்நலத்துக்கு நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் சாப்பிட்டால், சுறுசுறுப்பாக இருக்கலாம்.

உணவுக்கு முன்பாக பழங்கள் சாப்பிடுவது செரிமானத்துக்கு நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.