/

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

ஜலதோஷம் அடிக்கடி வந்து நம்மளைப் பாடாய்ப்படுத்தும். துளசிச் சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து பரவுவதால் ஜலதோஷம் வருவது மட்டுப்படும்.

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 4:05 am IST

ஜலதோஷம் அடிக்கடி வந்து நம்மளைப் பாடாய்ப்படுத்தும். துளசிச் சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து பரவுவதால் ஜலதோஷம் வருவது மட்டுப்படும் .

மூட்டு வலி மிக அதிகமாகச் சிரமப்படுத்தும். கடுகு , சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து, சுட வைத்து, ஆறிய பின்பு சிறிது கற்பூரம் சேர்த்து கால் மூட்டுகளில் தடவி வர, சில நாள்களில் வலி குறையும்.

துளசியைப் போட்டு நீரைக் கொதிக்க வைத்து, அந்த நீரைப் பருகினாலே ஜலதோஷம், இருமல், சளி போன்றவை விரைவில் நீங்கிவிடும். துளசி வேரை கையில் கட்டிக் கொண்டால் இடி கூட தாக்காது என்பார்கள். வீட்டின் வாசல் படியில் மஞ்சள் துணியில் துளசியைக் கட்டி வைத்தால் வீட்டை இடி தாக்காது. இடியை தாங்கக்கடிய சக்தி அதற்கு உண்டு என்று அந்தக் காலத்தில் கூறுவார்கள்.

ஒரு பாத்திரத்தில் வெந்நீர் சூடாக ஊற்றி, ஒரு பிடி நொச்சி இலையையும் கொஞ்சம் மஞ்சள் தூளையும் போட்டு ஆவி பிடித்தால் சைனஸ் தொல்லை நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.