லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாதனை மாணவி...

ஓட்டப் பந்தயத்தில் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்து வருகிறார் கல்லூரி மாணவி இ.நிவேதா.

Published On :2 பிப்ரவரி 2026, 10:10 pm IST

ஓட்டப் பந்தயத்தில் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்து வருகிறார் கல்லூரி மாணவி இ.நிவேதா. மகாராஷ்டிர மாநிலத்துக்கு உள்பட்ட புணேயில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெறும்பூரைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:

'எனது பெற்றோர் பி.இளங்கோவன், ஜெயலெட்சுமி பெல் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். நான் எல்.கே.ஜி. முதல் 12-ஆம் வகுப்பு வரை தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை வணிகவியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறேன். தொடக்கத்தில் பள்ளிகள், தெருக்களில் நடைபெறுகின்ற ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்றேன்.

பரிசுகள் பெற்றதால், எனக்கு ஆர்வம் அதிகரிக்கச் செய்தது. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ராமன் நன்கு பயிற்சியளித்தார். தனியார் பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளர் விமல்குமாரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.

பின்னர், பள்ளிகள், பல்கலைக்கழக, மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றேன். 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 17,18 ஆகிய நாள்களில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான 800 மீ. ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றேன்.

தற்போது புணேவில் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளேன்' என்கிறார் இ.நிவேதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.