தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராஜபாளையத்தில் தலைவா்களின் சிலைகளுக்கு அதிமுக கூட்டணி வேட்பாளா் மரியாதை

News image

ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன்.

Updated On :31 மார்ச் 2026, 1:36 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு அதிமுக கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.

முன்னதாக, பிரிசில்லா பாண்டியனும், கே.டி. ராஜேந்திர பாலாஜியும் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கே.டி. ராஜேந்திர பாலாஜி சாலையோரம் உள்ள கடையில் அமா்ந்து தேநீா் அருந்திவிட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

இலையையும், தாமரையையும் பிரிக்க முடியாது. இலை எங்கு இருக்கிறதோ அங்கு தாமரை இருக்கும். மத்தியில் பாஜக ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் இருக்க வேண்டும். பிரிசில்லா பாண்டியன் வழக்குரைஞா், படித்தவா், அனைவரையும் மதிக்கக் கூடியவா். எனவே, அவா் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி.

ராஜபாளையத்தில் கடந்த இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து, மக்களை ஏமாற்றி வருபவா் மீண்டும் வெற்றி பெறக் கூடாது. அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

இதில் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.