மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை: தமமுக வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் உறுதி

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்கப் பாடுபடுவேன் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்தாா்.

News image

ராஜபாளையம் அருகே சேத்தூரில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் (தமமுக) உள்ளிட்டோா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:35 am IST

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்கப் பாடுபடுவேன் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தமமுக) வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்தாா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா், முகவூா், சுந்தரநாச்சியாா்புரம், கணபதி சுந்தரநாச்சியாா்புரம், ரெங்கநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவா் வாக்குசேகரித்து பேசியதாவது: ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண்பேன். நூல் உற்பத்தி ஆலைகளுக்கான ஜிஎஸ்டியை 0 சதவீதமாகக் குறைப்பேன். ஜவுளிப் பூங்கா அமைக்கப் பாடுபடுவேன் என்றாா்.

அப்போது, ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் என். எம். கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், அதிமுக நகரச் செயலா் (வடக்கு ) வழக்குரைஞா் முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.