மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவில் வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 1:06 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவில் வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் போத்தி (53). இவா், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இனிப்பகம் நடத்தி வருகிறாா். இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவரது இளைய மகன் கவுதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் போத்தியும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனா். இளைய மகன் கவுதம் மட்டும் கீழே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அதிகாலை 2 மணிக்கு வீட்டின் கதவை தட்டிய 3 போ், கவுதமை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 கிராம் தங்க நகை, ரூ. 51 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.