மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மதுபுட்டிகள் விற்ாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 1:05 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மதுபுட்டிகள் விற்ாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மதுபுட்டிகளை வாங்கி பதுக்கி வைத்து சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளா் இலக்கியமுத்து உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது சட்ட விரோதமாக மதுபுட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்த சிவலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்த வீரமணி (36) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 53 மதுபுட்டிகளை போலீஸாா் கைப்பற்றினா்.

அதேபோல, ரயில் நிலையம் அருகே கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து (67) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 131 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.