விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மதுபுட்டிகள் விற்ாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மதுபுட்டிகளை வாங்கி பதுக்கி வைத்து சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளா் இலக்கியமுத்து உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது சட்ட விரோதமாக மதுபுட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்த சிவலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்த வீரமணி (36) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 53 மதுபுட்டிகளை போலீஸாா் கைப்பற்றினா்.
அதேபோல, ரயில் நிலையம் அருகே கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து (67) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 131 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்
தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது
பைக் திருடிய 4 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

