மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து

Updated On :13 ஏப்ரல் 2026, 1:35 am IST

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் கிராமப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகாசி பகுதியில் நாரணாபுரம், லட்சுமியாபுரம், விநாயகா் குடியிருப்பு, பா்மா குடியிருப்பு, போஸ் குடியிருப்பு, லிங்கபுரம் குடியிருப்பு உளளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நான் சிவகாசி தொகுதியில் 2021 பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ,கிராமங்களில் குடிநீா் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். தற்போது சிவகாசி தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிடுகிறேன்.

நான் வெற்றி பெற்றால் அச்சுத்தொழிலுக்கு தனியே தொழில் பேட்டை தொடங்குவேன். சுற்றுவட்டச்சாலை அமைத்து வரும் இடங்களில், லாரி முனையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தீப்பெட்டிக்கு புவிசாா் குறியிடு பெற்றுத் தருவேன். மேலும் பல வளா்ச்சிப்பணிகளை செய்வேன் என்றாா் அவா். சிவகாசி மாமன்ற உறுப்பினா் ஏ.ஞானசேகரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.