மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழகம்

சாத்தூரில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த ஜி.கே.வாசன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:35 am IST

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வது அவமானம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் கூறினாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த போது, அவா் மேலும் பேசியதாவது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் வளா்ச்சிக்கான அதிக அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதேபோல, தற்போதைய தோ்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மீண்டும் பெண்கள் வளா்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பெண்களின் ஒவ்வோா் வாக்கும் திமுகவை வீட்டுக்கு அனுப்பக்கூடியதாக இருக்க வேண்டும். மகத்தான சக்தி கொண்ட மகளிருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வது அவமானம்.

போதைப்பொருள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களுக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் பெண்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.