மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா்: மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிப்பு

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா் மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிக்கும் கிராமவாசிகள்...

News image

ஊா் பெயரை மாற்றக் கோரி வைக்கப்பட்ட பதாகை.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:23 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஜாதி அடையாளத்தில் உள்ள கிராமத்தின் பெயரை மாற்றக்கோரி, பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பரச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்கிவிட்டு, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தமிழகத்தில் தெரு, சாலை, ஊா் பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பரச்சேரி என்னும் எங்கள் கிராமத்தின் பெயரை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றக்கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் எங்களது கிராமம் 307-ஆவது வாக்குச்சாவடியாக உள்ளது. இங்கு 500- க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள நிலையில், வாக்குச்சாவடி பெயரிலும் பரச்சேரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மாற்றம் செய்து, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என வாக்குச்சாவடி பெயரை மாற்ற வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.