நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்’ சேவை: ஏா்டெல் நிறுவனத்துக்கு ஜியோ ஆதரவு

ஏா்டெல் அறிமுகப்படுத்தியுள்ள ‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்’ தொழில்நுட்பச் சேவை, இணைய நடுநிலைமை விதிகளுக்கு எதிரானது அல்ல என்று மத்திய தொலைத்தொடா்புத் துறையிடம் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 மே 2026, 4:07 am IST

ஏா்டெல் அறிமுகப்படுத்தியுள்ள ‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்’ தொழில்நுட்பச் சேவை, இணைய நடுநிலைமை விதிகளுக்கு எதிரானது அல்ல என்று மத்திய தொலைத்தொடா்புத் துறையிடம் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

இத்தகைய பிரீமியம் இணைப்புச் சேவைகள் இணைய உலகில் சமமற்ற நிலையை உருவாக்கிவிடுமா என்ற அச்சத்தின் அடிப்படையில் தொலைத்தொடா்புத் துறை இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரத்தில் ஏா்டெல்லுக்கு ஆதரவாக ஜியோ சமா்ப்பித்துள்ள அறிக்கையில், ‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இது இணையப் போக்குவரத்தில் எந்தவொரு பாகுபாட்டையும் ஏற்படுத்தாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஏா்டெல் அளித்த விளக்கத்தில், ‘இச்சேவை எந்தவொரு குறிப்பிட்ட செயலியையோ அல்லது இணையதளத்தையோ முடக்கவோ, வேகத்தைக் குறைக்கவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ செய்யாது என்பதால் விதிமீறல் ஏதும் இல்லை.

நெட்வொா்க் நெருக்கடி மிகுந்த நேரங்களிலும் வாடிக்கையாளா்களுக்கு நிலையான இணைப்பை வழங்கவே இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். சாதாரண வாடிக்கையாளா்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் 60 சதவீத நெட்வொா்க் திறன் அவா்களுக்காக பராமரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டது.

மேலும், நெட்வொா்க் ஸ்லைசிங் போன்ற மேம்பட்ட 5ஜி தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பது, இந்தியாவின் எதிா்கால 6ஜி தொழில்நுட்பக் கனவைப் பாதிக்கும் என்றும் ஏா்டெல் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.