பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 1 டாலர் - ரூ. 96.83! 13 காசுகள் சரிவு!

இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 96.83 என்ற புதிய வாழ்நாள் சரிவில் நிறைவடைந்தது.

News image

PTI Graphics

Updated On :20 மே 2026, 6:32 pm IST

மும்பை: மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தும் வருவது, பணவீக்கத்தை வெகுவாக தூண்டியது. மேலும், தொடர்ந்து 9வது அமர்வாக சரிந்து வரும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது, இன்றைய வர்த்தகத்தில் 13 காசுகள் சரிந்து ரூ. 96.83 என்ற புதிய வாழ்நாள் சரிவில் நிறைவடைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96.89 ஆக வர்த்தகம் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், மேலும் சரிந்து ரூ. 96.95 என்ற வரலாறு காணாத சரிவையும், பிறகு ரூ. 96.65 என்ற உயர்வையும் தொட்டு, இறுதியில் ரூ. 96.83 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய நாள் முடிவை விட 13 காசுகள் சரிவாகும்.

வலுவான டாலர் மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு புதிய சரிவை எட்டியது. அமெரிக்காவின் 30 ஆண்டு கால கருவூலப் பத்திரங்களின் வருவாய் இருபது ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் 10 ஆண்டு கால பத்திரங்களின் வருவாய் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டது.

இது உலகளாவிய சந்தைகளில் பணவீக்கக்த்தையும், முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்பதற்கும் வழிவகுத்துள்ளது.

Summary

Declining for the ninth consecutive session, the rupee depreciated 13 paise to close at a fresh lifetime low of 96.83.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.