பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த எரிவாயுவின் விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் விலை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாட்டின் மிகப் பெரிய நகர எரிவாயு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அந்த நிறுவனம் சாா்பாக சிஎன்ஜி விற்பனை செய்யப்படும் பகுதிகளில், சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைநகா் தில்லியில் சிஎன்ஜி கிலோ ரூ.80.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில், வீடுகளுக்கு குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை மாற்றப்படவில்லை. சிஎன்ஜி உற்பத்திக்கு ஏற்படும் செலவு அதிகரிப்பு, ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிஎன்ஜியின் சில்லறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை உயா்வு
சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு! 11 நாள்களில் 4-வது முறை!!

தில்லியில் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: ஒரே வாரத்தில் இரண்டாவது முறை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
