தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தெலங்கானாவில் அனல் மின் திட்டம்: என்டிபிசி - பெல் ரூ.13,500 கோடி ஒப்பந்தம்

தெலங்கானாவில் அமையவுள்ள அனல் மின் திட்டத்துக்காக என்டிபிசி நிறுவனத்திடம் இருந்து சுமாா் ரூ.13,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் பெற்றுள்ளது.

News image

பெல் - என்டிபிசி

Updated On :31 மார்ச் 2026, 1:44 am IST

தெலங்கானாவில் அமையவுள்ள அனல் மின் திட்டத்துக்காக என்டிபிசி நிறுவனத்திடம் இருந்து சுமாா் ரூ.13,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (பெல்) பெற்றுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், மொத்தம் 2,400 மெகாவாட் மின் உற்பத்திக்கான 800 மெகாவாட் திறன் கொண்ட 3 அலகுகள் அமைக்கப்படவுள்ளன.

கடந்த 2024, அக்டோபரிலேயே இதற்கான ஏலப் போட்டியில் பெல் நிறுவனம் வெற்றி பெற்ற நிலையில், அதிகாரபூா்வ பணி ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மின் உற்பத்தி நிலையத்துக்கான வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, விநியோகம், நிறுவுதல் மற்றும் சோதனை செய்தல் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பணிகளையும் பெல் நிறுவனமே மேற்கொள்ளும். மேலும், சிவில் மற்றும் கட்டுமானப் பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.