தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விதிமுறைகள் மீறிய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி

விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ. 31.8 லட்சம் அபராதம் விதிப்பு.

News image

இந்திய ரிசர்வ் வங்கி

Updated On :30 மார்ச் 2026, 10:42 pm IST

மும்பை: நிதிநிலை அறிக்கைகளில் தகவல்களை வெளியிடுவது தொடர்பான ஒரு சில குறிப்பிட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ. 31.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

மார்ச் 31, 2025 நிலவரப்படி வங்கியின் நிதிநிலையை மேற்பார்வையின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கான, ஆய்வை மேற்கொண்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது தொடர்பான மேற்பார்வை ஆய்வின் போதும், அதுகுறித்த பரிமாற்றங்களின் அடிப்படையில், வங்கிக்கு விளக்கம் கோரும் அறிவிக்கை அனுப்பப்பட்டது.

இந்த அறிவிக்கைக்கு வங்கி அளித்த விளக்கத்தையும், அதனுடன் கூடுதல் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, 2024-25 நிதியாண்டிற்கான வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பிட்ட சில புகார்களை வெளியிடத் தவறியது தொடர்பான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக ஆர்பிஐ அறிவித்தது. இதன் அடிப்படையில் அபராதம் விதித்தது குறிப்பிட்டத்தக்கது.

Summary

The RBI on Monday imposed a Rs 31.8 lakh penalty on Airtel Payments Bank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.