மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்ந்துள்ளதைப் பற்றி...

News image

பங்குச்சந்தை.

Updated On :24 மார்ச் 2026, 10:14 am IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின், மத்திய கிழக்குப் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை செவ்வாய்க்கிழமை காலை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த அச்சத்திற்கிடையில், நேற்று உள்நாட்டு சந்தைகள் கடுமையான சரிவைக் கண்டன.

கச்சா எண்ணெய் மீதான அதிகளவிலான தேவைகள் காரணமாகவும் கடந்த சில நாள்களாகவே பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.

கடந்த 25 நாள்களாக நடைபெற்று வரும், மேற்காசிய போரை 5 நாள்கள் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும், நிரந்தரமாக போரை நிறுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சர்வதேச ரீதியிலான அறிவிப்பு இந்திய பங்குச்சந்தையில் இன்று (மார்ச் 24) காலை கடுமையாக எதிரொலித்தது.

அதன்படி, காலை வர்த்தகம் தொடங்கியதும் 9.15 மணியளவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 371.50 புள்ளிகள் உயர்ந்து 22,882.10 ஆகவும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,398.01 புள்ளிகள் உயர்ந்து 74,094.40 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி50-ல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீ, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்ட் டி, சன் பார்மா, மாருதி சுசூகி, அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ, ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டிகோ, டைட்டன், இடர்னல்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கணிசமான லாபத்தை ஈட்டின.

அதேநேரத்தில், கோல் இந்தியா, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், எஸ்பிஐ காப்பீடு உள்ளிட்ட பங்குகள் சரிவைச் சந்தித்தன.

டிரம்ப்பின் அறிவிப்பு கச்சா எண்ணெய்களிலும் எதிரொலித்தது. அதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 112 டாலர்களில் இருந்து 100 டாலராக சரிந்தது.

Summary

Indian equity markets are set to open sharply higher on Tuesday, tracking a strong rebound in global equities after signs of easing geopolitical tensions in West Asia lifted investor sentiment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.