புதுதில்லி: உலகளாவிய பதற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்தியப் பங்குச் சந்தையில் நித்தம் எதிரொலிக்கும் நிலையில், இது பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மையை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு, மற்றும் உயர்ந்த வரும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிறுவன வருவாயில் ஏற்படுத்தும் தாக்குதல் உள்ளிட்டவையால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதம் ரூ. 88,180 கோடி அளவுக்கு முதலீடுகளை விற்பனை செய்தனர்.
தேசிய பத்திரங்கள் வைப்பு நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 22,615 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்தத் தொகை கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்ததாகும்.
மார்ச் மாதத்தில் (மார்ச் 20 நிலவரப்படி) ஒவ்வொரு வர்த்தக நாளிலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பங்குகளை விற்பனை செய்ததில், சுமார் ரூ.88,180 கோடி மதிப்புள்ள முதலீடை திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த விற்பனையை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் இதுவரையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான பங்குகளை விற்று வெளியேற்றியுள்ளனர்.
இந்தத் தொடர் விற்பனை அழுத்தத்திற்கு, உலகளாவிய பொருளாதாரச் சவால்களும், அதிகரித்த வரும் நிச்சயமற்ற தன்மையுமே காரணம் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிறுவன வருவாயை பாதிக்கக்கூடும் என்ற நிலையால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்துள்ளனர்.
மேற்கு ஆசியாவில் பதற்றம், கச்சா எண்ணெய் விலை நிலைபெற்றால் மட்டுமே சந்தை மேம்படக்கூடும்.
Summary
Foreign investors have pulled out Rs 88,180 crore from Indian equities so far this month.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


