சென்னை: பன்னாட்டு ஃபேஷன் பிராண்டான மேக்ஸ் ஃபேஷன், அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) சென்னையில் 34வது கடையையும், தமிழகத்தில் 71வது விற்பனை நிலையத்தையும் நடிகை கயாது லோஹர் திறந்து வைத்தார்.
விரிவாக்கத் திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தம் 100 கடைகளை தொடங்க மேக்ஸ் ஃபேஷன் இலக்கு வைத்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தின் திறப்பு விழா குறித்துப் பேசிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுமித் சந்தன், சென்னை எப்போதுமே எங்களின் ஆற்றல்மிக்க மற்றும் கலாச்சார ரீதியாக துடிப்பான சந்தைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எங்களின் வளசரவாக்கக் கடையின் தொடக்கமானது, அதன் வளர்ந்து வரும் ஃபேஷன் சமூகத்துடன் இணைந்து வளர்வதற்கான எங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
விரிவாக்கத் திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 40 முதல் 50 கடைகளைத் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
சுமார் 14,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கடை, மிகவும் விசாலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென பிரத்யேகப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
சென்னையில் எங்களின் 34வது கடையையும், தமிழகத்தில் 71வது கடையையும் திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் மேக்ஸ் ஃபேஷன் மண்டல வணிகத் தலைவர் சதீஷ் குமார்.
தற்போது, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களில் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அதே வேளையில், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள கடைகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Summary
Max Fashion has set a target to open 40-50 stores across the country in the next year.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தோ்வு: நாடு முழுவதும் 22 லட்சம் போ் எழுதினா்

நீட் நுழைவுத் தேர்வு நிறைவு! இயற்பியல், வேதியியல் கடினம்?

தஞ்சாவூரில் இன்று 12 மையங்களில் நீட் தோ்வு - 5,165 போ் விண்ணப்பம்

நாடு முழுவதும் இன்று நீட் தோ்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

