தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்தியாவின் பால் உற்பத்தி 247 மில்லியன் டன்னாக அதிகரிப்பு!

இந்தியாவின் பால் உற்பத்தி 1950 கால கட்டத்தில் 17 மில்லியன் டன்னிலிருந்து 2025ல் 247 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

News image

பால்

Updated On :21 மார்ச் 2026, 5:23 pm IST

சண்டீகர்: வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளரும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநருமான எம்.எல். ஜாட், இந்தியாவின் பால் உற்பத்தி 1950 கால கட்டத்தில் 17 மில்லியன் டன்னிலிருந்து தற்போது 2025ல் 247 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மொத்த உற்பத்தியில் 65 சதவீதப் பங்களிப்பையும், இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் 16% பங்களிப்பையும் அளிக்கிறது. மேலும் இது 46.1 சதவீத மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவதாக தெரிவித்தார்.

ஹரியானாவில் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போது, சுமார் 20,000 கால்நடை மருத்துவர்களைப் பணியமர்த்தவும், கல்லூரிகள் மற்றும் ஆய்வகங்களுக்கு மானியம் வழங்கவும், கூட்டுறவுத் துறையினருக்கு வரிச் சலுகைகளை அளிக்கவும் ஏதுவாக, மத்திய பட்ஜெட்டில் கால்நடை வளர்ப்புத் துறைக்கு 6,153 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியப் பால் உற்பத்தி 1950ல் 17 மெட்ரிக் டன்னிலிருந்து 2025ல் 247 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. பஞ்சாப்-ஹரியானா உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது என்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் பால் தேவையானது 480 முதல் 606 மெட்ரிக் டன்னாக இருக்கும் என நிதி ஆயோக் கணித்துள்ளதாக ஜாட் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த பால் உற்பத்தியில், நாட்டு எருமைகளின் பங்கு 31.18 சதவீதமும், அதனைத் தொடர்ந்து கலப்பின மாடுகள் 30.80 சதவீதமும், நாட்டு மாடுகள் 11.20 சதவீதமும், வகைப்படுத்தப்படாத மாடுகள் 9.64 சதவீதமும், வகைப்படுத்தப்படாத எருமைகள் 11.97 சதவீதமும், ஆடுகள் 3.32 சதவீதம் மற்றும் வெளிநாட்டு மாடுகள் 1.89 சதவீதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.