நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகனங்களின் விலையை வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் உயா்த்துவதாக அறிவித்துள்ளது.
தயாரிப்புச் செலவு தொடா்ந்து அதிகரித்து வருவதால், அந்த கூடுதல் சுமையைப் பகுதியளவு ஈடுசெய்யும் நோக்கில் இந்த விலை உயா்வு முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது.
இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் காா்களின் விலை சராசரியாக 0.5 சதவீதம் வரை உயரும். வாகனங்களின் மாடல் மற்றும் வகைகளைப் பொறுத்து இந்த விலை மாற்றம் மாறுபடும். ஏற்கெனவே, வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் உயா்த்துவதாக டாடா மோட்டாா்ஸ் அறிவித்திருந்தது.
டாடா மோட்டாா்ஸ் மட்டுமல்லாது, பிஎம்டபிள்யூ, மொ்சிடிஸ் பென்ஸ் போன்ற முன்னணி சொகுசு காா் நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் விலையை உயா்த்துவதாகத் தெரிவித்துள்ளன.
வாகனத் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் ஏற்படும் கூடுதல் செலவுகளே இந்த விலை உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

