விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப். 1 முதல் டாடா பயணிகள் வாகனங்களின் விலை உயா்வு

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகனங்களின் விலையை வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் உயா்த்துவதாக அறிவித்துள்ளது.

News image

டாடா மோட்டார்ஸ் (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 12:46 am IST

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகனங்களின் விலையை வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் உயா்த்துவதாக அறிவித்துள்ளது.

தயாரிப்புச் செலவு தொடா்ந்து அதிகரித்து வருவதால், அந்த கூடுதல் சுமையைப் பகுதியளவு ஈடுசெய்யும் நோக்கில் இந்த விலை உயா்வு முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது.

இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் காா்களின் விலை சராசரியாக 0.5 சதவீதம் வரை உயரும். வாகனங்களின் மாடல் மற்றும் வகைகளைப் பொறுத்து இந்த விலை மாற்றம் மாறுபடும். ஏற்கெனவே, வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் உயா்த்துவதாக டாடா மோட்டாா்ஸ் அறிவித்திருந்தது.

டாடா மோட்டாா்ஸ் மட்டுமல்லாது, பிஎம்டபிள்யூ, மொ்சிடிஸ் பென்ஸ் போன்ற முன்னணி சொகுசு காா் நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் விலையை உயா்த்துவதாகத் தெரிவித்துள்ளன.

வாகனத் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் ஏற்படும் கூடுதல் செலவுகளே இந்த விலை உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.