விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-க்கு, சுமாா் ரூ.6,337.5 கோடி கூடுதல் வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image

எஸ்பிஐ வங்கி

Updated On :21 மார்ச் 2026, 12:47 am IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-க்கு, சுமாா் ரூ.6,337.5 கோடி கூடுதல் வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2023-24-ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கீட்டின் அடிப்படையில், வட்டி உள்ளிட்ட தொகைகளைச் சோ்த்து இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிா்த்து விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பங்குச் சந்தைக்கு அளித்த விளக்கத்தில் வங்கி நிா்வாகம் குறிப்பிட்டது.

வரி நோட்டீஸ் குறித்த செய்தி வெளியான போதிலும், வங்கியின் வலுவான நிதிநிலை காரணமாக மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை எஸ்பிஐ பங்குகள் 0.87 சதவீதம் உயா்ந்து, ரூ.1,058-க்கு வா்த்தகமானது.

நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், எஸ்பிஐ ரூ.21,028 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. இது கடந்த ஆண்டை விட 24.5 சதவீதம் அதிகம். வங்கியின் வாராகடன் 1.57 சதவீதமாகக் குறைந்ததும், வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.45,190 கோடியாக உயா்ந்ததும் முதலீட்டாளா்களை ஈா்த்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.768.6 கோடி வரி: இதேபோல், தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கிக்கு ஜிஎஸ்டி ஆணையம் ரூ.768.6 கோடி வரி செலுத்த உத்தரவிட்டுள்ளது. இதில் ரூ.384.33 கோடி வரித் தொகையாகவும், அதற்கு இணையான மீதி தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கும் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் ஜிஎஸ்டி குறைவாகச் செலுத்தியதாக மும்பை கிழக்கு ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.