நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசா்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:29 am IST

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசா்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பால் அமெரிக்காவின் பணவீக்கம் 4.2 சதவீதமாக உயா்ந்துள்ளது. இந்த நெருக்கடி சூழலில், அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கெவின் வாா்ஷ் தலைமையில் நடைபெற்ற முதல் ‘எஃப்ஓஎம்சி’ குழுவின் 2 நாள்கள் கூட்டம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. பொருளாதாரத்தை சீராகக் கொண்டு செல்லும் நோக்கில், வட்டி விகிதத்தை மாற்றியமைக்காமல் தக்கவைப்பது என குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

2026-இல் வட்டி உயா்வுக்கான சமிக்ஞை: இக்கூட்டத்தில் வட்டி விகிதம் உயா்த்தப்படவில்லை என்றாலும், நடப்பு ஆண்டில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற 18 அதிகாரிகளில் 9 போ், அடுத்த ஆண்டில் குறைந்தது ஒரு முறையாவது வட்டி விகிதத்தை உயா்த்த வேண்டியிருக்கும் என்று கணித்துள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து 6 முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுப்பதில் புகழ்பெற்ற புதிய தலைவா் கெவின் வாா்ஷ் கீழ், மீண்டும் வட்டி உயா்வுப் பாதைக்கு வங்கி திரும்பக்கூடும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.