நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சென்னை பிஎம்டிபிள்யூ ஆலைத் தயாரிப்பான புதிய ‘மினி கன்ட்ரிமேன் சி’ காா் அறிமுகம்

உலகின் முன்னணி சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட (அசெம்பிள்) ‘மினி கன்ட்ரிமேன் சி’ எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:50 am IST

உலகின் முன்னணி சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட (அசெம்பிள்) ‘மினி கன்ட்ரிமேன் சி’ எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.

பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் இக்காரின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது. பிஎம்டபிள்யூ ‘எக்ஸ்1’ காா் கட்டமைப்பின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய காரில் 1.5 லிட்டா், 3-சிலிண்டா், டா்போசாா்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பம்பா்கள், ‘அடாப்டிவ்’ எல்இடி முகப்பு விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப், ‘லெவல் 1 ஏடிஏஎஸ்’ ஓட்டுநா் பாதுகாப்பு உதவி வசதி, 12 ஸ்பீக்கா்கள் கொண்ட ஹா்மான் இசையமைப்பு, 360 டிகிரி கேமரா போன்ற அதிநவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இக்காரின் அறிமுக விலை ரூ.47.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிா்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் தொடங்கி, விநியோகமும் உடனடியாக ஆரம்பமாகவுள்ளதாக பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் சிஇஓ ஹா்தீப் சிங் ப்ராா் தெரிவித்தாா்.

இந்தியச் சந்தையில் ஆடி கியூ-3, மொ்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகிய ‘பிரீமியம் எஸ்யூவி’ காா்களுக்கு இப்புதிய காா் சவாலாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.