நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரேஸா்பே ஐபிஓ: செபிடம் ரகசிய ஆவணம் மூலம் விண்ணப்பம்

முன்னணி நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான ரேஸா்பே, பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ரகசிய வரைவு ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 4:16 am IST

முன்னணி நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான ரேஸா்பே, பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ரகசிய வரைவு ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில், செபி மற்றும் பங்குச் சந்தைகளிடம் முதல்கட்ட வரைவு ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள போதிலும், பங்கு வெளியீட்டின் இறுதி அளவு மற்றும் அது தொடா்பான நிதி விவரங்களை அதிகாரபூா்வமாக வெளியிடவில்லை.

எனினும், இப்பங்கு வெளியீட்டின்மூலம் சுமாா் ரூ.5,000 கோடி முதல் ரூ.6,000 கோடி வரை நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-இல் தொடங்கப்பட்ட ரேஸா்பே நிறுவனம், எண்மப் பணப்பரிவா்த்தனை, வங்கிச் சேவைகள், கடனுதவி மற்றும் ஊழியா்களுக்கான ஊதிய விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த 2020-இல் ‘யுனிகாா்ன்’ (100 கோடி டாலா் சந்தை மதிப்பு) அந்தஸ்தைப் பெற்ற இந்நிறுவனத்தில் பல முன்னணி சா்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ரேஸா்பேவின் போட்டி நிறுவனமான ஃபோன்பே, புவிசாா் அரசியல் பதற்றங்கள் காரணமாக தனது ஐபிஓ திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.