பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஹீரோ மோட்டோகார்ப் மே மாதம் விற்பனை 12% உயர்வு!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மே மாதம் வாகன விநியோகம் 12 சதவீதம் உயர்ந்து 5,70,068 வாகனங்களாக இருப்பதாக இன்று தெரிவித்தது.

News image
Updated On :2 ஜூன் 2026, 9:49 pm IST

புதுதில்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மே மாதம் வாகன விநியோகம் 12 சதவீதம் உயர்ந்து 5,70,068 வாகனங்களாக இருப்பதாக இன்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் விற்பனை 5,07,701 வாகனங்களாக இருந்தது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இம்மாதத்தில் உள்நாட்டு சில்லறை விற்பனை வேகம் வலுவாக இருந்ததாகத் தெரிவித்தது.

நிறுவனம், மே 2026ல் அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வணிகத்தில் வலுவான வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டதாகக் தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது கிட்டத்தட்ட 10% வளர்ச்சி. அதே வேளையில், நிறுவனத்தின் உலகளாவிய வணிகம் 78 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

ஹீரோ மோட்டோகார்ப், அதன் சர்வதேச சந்தையில் நிலவும் வலுவான தேவை, விரிவடைந்து வரும் பிரீமியம் தயாரிப்பு வரிசை மற்றும் சந்தை விரிவாக்க நடவடிக்கை ஆதரவுடன் இணைந்து, நிறுவனத்தின் வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Summary

Hero MotoCorp reported 12 per cent rise in dispatches at 5,70,068 units in May 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.