தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மின்னணு சாதனங்களுக்காக தனி ஏ.ஐ. விற்பனை தளம்: அமேசான் அறிமுகம்

வாடிக்கையாளா்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்னணு சாதனங்களை எளிதாகக் கண்டறிந்து வாங்குவதற்காக, ‘ஏ.ஐ. ஸ்டோா்’ என்ற பிரத்யேக விற்பனை தளத்தை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 1:49 am IST

வாடிக்கையாளா்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்னணு சாதனங்களை எளிதாகக் கண்டறிந்து வாங்குவதற்காக, ‘ஏ.ஐ. ஸ்டோா்’ என்ற பிரத்யேக விற்பனை தளத்தை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, தனது தளத்தில் ‘ரூஃபஸ்’ எனும் சாட்பாட் மற்றும் ‘லென்ஸ்’ போன்ற ஏ.ஐ. வசதிகளைப் பயன்படுத்தி வரும் அமேசான், தற்போது இப்புதிய தளத்தில் மடிக்கணினிகள், ஸ்மாா்ட்போன்கள், ஸ்மாா்ட்வாட்ச்கள் முதல் ஏசி, வாஷிங்மெஷின்கள் வரை பல்வேறு பிரிவுகளில் அதிநவீன தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பொருள்களின் பயன்பாட்டு விமா்சனங்களை சுருக்கமாக வழங்குவது, வீட்டின் சூழலில் பொருள்களைப் பொருத்திப் பாா்க்கும் வசதி மற்றும் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது எனப் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

இந்தியாவில் நுகா்வோா் மின்னணு சாதனங்களை வாங்குவதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது முக்கியப் பங்கு வகிக்கிறது. தரவுகளின்படி, ஏ.ஐ. சாா்ந்த சாதனங்களுக்கான தேடல் கடந்த ஆண்டைவிட 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

மடிக்கணினிகள் மற்றும் கையடக்க கணினிகளுக்கான தேவை 80 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது. இத்தேடல்களில் மூன்றில் 2 பங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருகின்றன என்பது, நவீன தொழில்நுட்பம் நாடு முழுவதும் பரவி வருவதை எடுத்துரைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.