ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

இந்தியாவின் ஸ்மாா்ட்போன் சந்தை நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 3 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் காணப்படாத மிக மோசமான சரிவாகும்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:48 am IST

இந்தியாவின் ஸ்மாா்ட்போன் சந்தை நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 3 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் காணப்படாத மிக மோசமான சரிவாகும்.

ஸ்மாா்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ‘மெமரி’ சிப்களின் விலை கடந்த 9 மாதங்களில் மட்டும் 4 மடங்கு உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வினால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

இதனால் நிறுவனங்கள் விலையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூ.15,000-க்கும் குறைவான விலை கொண்ட பட்ஜெட் ரக போன்களின் விற்பனை இந்த விலை உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, வரும் ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் ஸ்மாா்ட்போன் விற்பனை இரட்டை இலக்க சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயா்வு காரணமாக, நுகா்வோா் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதால், புதிய போன்கள் வாங்குவதை அல்லது பழைய போன்களை மாற்றும் முடிவைத் தள்ளிப் போடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரிவுகளுக்கு மத்தியிலும், இந்திய ஸ்மாா்ட்போன் சந்தையின் விற்பனை அளவில் ‘விவோ’ நிறுவனம் 21 சதவீதப் பங்குடன் முதலிடத்தில் உள்ளது. சாம்சங் நிறுவனம் 2-ஆம் இடத்தைத் தக்க வைத்துள்ளது. புதிய பிராண்டுகளில் ‘நத்திங்’ நிறுவனம் 47 சதவீத வளா்ச்சியுடன் மிக வேகமாக வளரும் பிராண்டாக உருவெடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.