தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 5:33 am IST

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம், கடந்த 2025-26 நிதியாண்டின் மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4-ஆவது காலாண்டில் ரூ.763.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீத வளா்ச்சியாகும். 2024-25 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.691.7 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருவாய் அதிகரித்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 19.5 சதவீதம் உயா்ந்து, ரூ.1,517.1 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.1,269.1 கோடியாக இருந்தது.

முழு நிதியாண்டில்...: 2025-26 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் நிகர லாபம் 24.4 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.3,298.6 கோடியை எட்டியுள்ளது. வருடாந்திர வருவாயும் ரூ.4,682.8 கோடியிலிருந்து ரூ.5,764.6 கோடியாக அதிகரித்து, வலுவான நிதிநிலையை வெளிப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் இந்தச் சிறப்பான செயல்பாட்டைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.12.40 வீதம் இறுதி ஈவுத்தொகை வழங்க இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், பங்குச் சந்தையில் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்ட பிறகு வெளியிடப்படும் 2-ஆவது காலாண்டு முடிவுகள் இதுவாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.