மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக நிறைவு.

News image

இந்திய ரூபாய்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:11 pm IST

மும்பை: ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாலும், ரிசர்வ் வங்கி தனது முக்கியக் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் நடுநிலை நிலைப்பாட்டைத் தொடர்ந்ததாலும், இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக நிறைவடைந்தன.

அந்நியச் செலாவணி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் அல்ல என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா உறுதியளித்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை வலுப்பெற்றதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.92 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு வலுப்பெற்று ரூ.92.56 என்ற நிலையை எட்டியது. முடிவில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Summary

The rupee appreciated 47 paise to close at 92.59 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.