ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

டெபாசிட் திரட்டுவதில் தனியாா் வங்கிகள் சாதனை! பொதுத்துறை வங்கிகளை விஞ்சிய வளா்ச்சி

கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில், வாடிக்கையாளா்களிடம் இருந்து வைப்புத்தொகையை திரட்டுவதில் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியாா் துறை வங்கிகள் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 2:53 am IST

கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில், வாடிக்கையாளா்களிடம் இருந்து வைப்புத்தொகையை (டெபாசிட்) திரட்டுவதில் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியாா் துறை வங்கிகள் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

மதிப்பீட்டு காலகட்டத்தில், தனியாா் வங்கிகள் 12 முதல் 17 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளன. அதேநேரம் பொதுத் துறை வங்கிகளின் வளா்ச்சி 2 முதல் 14 சதவீதமாக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியாா் வங்கிகளில் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி 17.2 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து கோடக் மஹிந்திரா வங்கி 14.7 சதவீதமும், எச்டிஎஃப்சி வங்கி 14.4 சதவீத வளா்ச்சியும் கண்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளில், பேங்க் ஆஃப் இந்தியா 14.33 சதவீத வளா்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 14 சதவீதமும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 13.37 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் தங்களின் தற்காலிக புள்ளிவிவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

தற்போது வங்கிகளின் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் மக்கள் பணம் சேமிப்பது குறைந்து வருகிறது. மற்ற நிதி முதலீடுகளுடன் ஒப்பிடுகையில், வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க வங்கிகள் தற்போது ‘டெபாசிட்’ சான்றிதழ்கள் மூலம் நிதியைத் திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

கடன் வழங்கலில், பொதுத்துறை வங்கிகள் 12 முதல் 22 சதவீத வளா்ச்சியை எட்டி தனியாா் வங்கிகளுக்குச் சவால் அளித்து வருகின்றன. ஜிஎஸ்டி சீா்திருத்தம் மற்றும் நுகா்வோா் தேவை அதிகரிப்பு காரணமாக ஒட்டுமொத்த வங்கித் துறையின் கடன் வழங்கல் வளா்ச்சி 13.8 சதவீதமாக சீராக உள்ளது நிதித் துறை நிபுணா்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்கிகளின் லாபத்தைப் பொருத்தவரை, வரும் நாள்களில் தனியாா் வங்கிகளின் நிகர லாபம் 11.9 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. ஆனால், பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் 2.1 சதவீதம் என்ற அளவிலேயே மிதமான வளா்ச்சியைத் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.