பொதுத் துறை வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயா்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதியம்-படிகள்-பணி நிபந்தனைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கின்றன. அதன்படி, ஊழியா்கள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையே 12-ஆவது இருதரப்பு ஒப்பந்தம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த ஒப்பந்த காலகட்டம், 2027, அக்டோபா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், 2027, நவம்பா் முதல் அமலாக்க வேண்டிய 13-ஆவது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்து, அடுத்த 12 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று பொதுத் துறை வங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஊதியத் தீா்வை எட்டும் வகையில், ஊழியா்கள் சங்கங்களுடன் இந்திய வங்கிகள் சங்கம் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கும்படி, பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதிச் சேவைகள் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
கடந்த முறை ஊதியத் தீா்வு இறுதி செய்யப்பட்டபோது, இனி வருங்காலங்களில் உரிய தேதியில் இருந்தே ஊதிய உயா்வை அமல்படுத்தும் வகையில் பேச்சுவாா்த்தையை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வங்கித் துறை விளங்குவதால், அதன் ஊழியா்களின் மன உறுதிப்பாட்டை பாரமரிக்க போதுமான ஊதிய உயா்வு முக்கியமென கருதப்படுகிறது. கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் லாபம் சாதனை அளவில் (ரூ.1.78 லட்சம் கோடி) பதிவானது. முந்தைய நிதியாண்டுகளில் ரூ.1.41 லட்சம் கோடி (2024-25), ரூ.1.05 லட்சம் கோடி (2023-24) லாபம் ஈட்டப்பட்டது.
இதேபோல், வங்கிகளின் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவில் 2.30 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘கிளாட் மித்தோஸ்’ அச்சுறுத்தல்: இணையவழி பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகள் முடிவு

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

மின்சாரம், சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உயா்த்த ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு: என்எல்சி தலைவா் தகவல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

