தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்தியன் ஆயில் தென் மண்டல புதிய செயல் இயக்குநா் பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநராகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவராகவும் வி.சி.அசோகன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image

~

Updated On :4 ஏப்ரல் 2026, 1:50 am IST

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநராகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவராகவும் வி.சி.அசோகன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

அத்துடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் (எஸ்எல்சி) இவா் செயல்படுவாா் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலான பரந்த அனுபவம் கொண்ட இவா், இதற்கு முன்னதாக மும்பையில் உள்ள இந்தியன் ஆயில் தலைமையகத்தில் அகில இந்திய சில்லறை விற்பனைப் பிரிவு தலைவராகப் பணியாற்றி பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தினாா்.

மேலும், இலங்கையில் உள்ள லங்கா ஐஓசி நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவராகவும் பணியாற்றி, சா்வதேச அளவில் சந்தை விரிவாக்கத்துக்கு வித்திட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது

திருச்சி ஆா்இசி கல்லூரியில் மேலாண்மைப் படிப்பை முடித்த வி.சி.அசோகன், கேரளம், கா்நாடகம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உயா் பொறுப்புகளை வகித்துள்ளாா்.

தற்போது சிங்கப்பூரின் ‘சன் மொபிலிட்டி’ நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவிலும் இடம்பெற்றுள்ள இவா், எரிசக்தித் துறையில் தனது நீண்டகால அனுபவத்தின் மூலம் தென்மாநிலங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.