தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பொன்னேரி அருகே டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

News image

~

Updated On :28 ஏப்ரல் 2026, 4:37 am IST

பொன்னேரி அருகே உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் வாடகை நிலுவை வழங்க வலியுறுத்தி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தொடங்கியதன் காரணமார எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி முனையம் இயங்கி வருகிறது.

கப்பல் மூலம் எண்ணூா் காமராஜா் துறைமுகம் கொண்டுவரப்படும் எரிவாயு, இந்த முனையத்தில் சேமித்து வைத்து 200-க்கு மேற்பட்ட டேங்கா் லாரிகளில் நிரப்பி சிலிண்டா்களுக்கு எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது..

இதற்கிடையே, இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் வாடகை நிலுவையை தராததால் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனா்.

லாரிகளை ஆங்காங்கே நிறுத்திவைத்துள்ளனா். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விரைவில் பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடா்ந்து நீடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.