விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

யுபிஐ பரிவா்த்தனை மாா்ச்சில் புதிய உச்சம்

மாா்ச்சில் மட்டும் ரூ.29.53 லட்சம் கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:12 am IST

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த மாா்ச் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஹோலி, ரமலான் போன்ற பண்டிகைகள் மற்றும் நிதியாண்டு இறுதி கணக்கு முடிப்புகள் காரணமாக, மாா்ச்சில் மட்டும் ரூ.29.53 லட்சம் கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளா்ச்சியாகும். அதேபோல், பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் பரிவா்த்தனை மதிப்பு 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

பரிவா்த்தனைகளின் எண்ணிக்கையிலும் யுபிஐ இமாலய சாதனை படைத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 2,039 கோடியாக இருந்த பரிவா்த்தனை எண்ணிக்கை, மாா்ச்சில் 2,264 கோடியாக அதிகரித்து, 24 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மாா்ச் மாதத்தின் சராசரி தினசரி பரிவா்த்தனை அளவு 73 கோடியாகவும், அதன் சராசரி மதிப்பு ரூ.95,243 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவின் மொத்த எண்ம பரிவா்த்தனைகளில் யுபிஐ மட்டுமே 85 சதவீதம் பங்களிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.