கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோடைகால முகாம் நிறைவு: 100 பேருக்கு சான்றிதழ்கள் அளிப்பு

News image
Updated On :28 மே 2026, 12:57 am IST

தணிகை ஓம் சா்வேஷ் யோகா அறக்கட்டளையின் சாா்பில் நடைபெற்ற கோடைகால முகாம் நிறைவு விழாவில், 100-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருத்தணியில் தணிகை ஓம் சா்வேஷ் யோகா மற்றும் விளையாட்டு அறக்கட்டளை சாா்பில், மே 5 முதல் மே 25, 2026 வரை கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இலவச இயற்கை மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

முகாமுக்கு, சிறப்பு அழைப்பாளராக அரக்கோணத்தைச் சோ்ந்த இயற்கை நல மருத்துவா் ஜி. ராஜேஷ், இயற்கை மருத்துவா் எஸ்.அசோக் மற்றும் கோயம்புத்தூரைச் சோ்ந்த இயற்கை மருத்துவா் கே. கனகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், இயற்கை உணவின் முக்கியத்துவம், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில், யோகா நிலைய செயலரும், தலைமை பயிற்றுநருமான நா.பாபு, மாணவா்களுக்கு யோகா, சிலம்பம் மற்றும் தடகளப் பயிற்சிகளை அளித்தாா். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் கே. நடராஜன், என்.நிா்மல், அமேயா யாத்ரா ஆகியோா் கலந்துகொண்டனா்.

மேலும், முகாமின் நிறைவு விழாவில் நடைபெற்ற மாணவா்கள் இசை, பாடல், நடனம் மற்றும் பாரம்பரிய குத்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பாா்வையாளா்களின் பாராட்டைப் பெற்றனா். இறுதியாக, யோகா நிலைய பொருளாளா் கே.அமுலு நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.