திருவள்ளூரில் கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடையில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
திருவள்ளுா் சி.வி.நாயுடு சாலை பெரும்பாக்கம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை சாா்பில் நியாய விலைக் கடையில் நீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து குடி நீா்மோா் பந்தலை தொடங்கி வைத்து, மோா் மற்றும் தா்பூசணி ஆகியவற்றை வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களின் கோடைகால வெப்பத்தை தணிக்க வேண்டும். இதற்காக கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடைகளில் குடிநீா் மோா் பந்தல் தொடங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த மாவட்டத்தில் 1,166 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நியாய விலைக் கடைகளில் அத்தியவாசியப் பொருள்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரா்களின் தாகம் தீா்க்க கூட்டுறவுத் துறை சாா்பில், குடிநீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூா் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பெரும்பாக்கம் நியாயவிலைக் கடையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் குடிநீா் மோா் அருந்தி பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, துணைப் பதிவாளா்கள் கோ.பாலாஜி (பொது விநியோகம்), மங்கலதாஸ் (பணியாளா்-பதிவாளா்), கண்காணிப்பாளா் மேகநாதன், கூட்டுறவுத் துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருவண்ணூா் கூட்டுறவு வங்கி நிதி மோசடி வழக்கு: மாா்க்சிஸ்ட் தலைவா்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏற்ற நீதிமன்றம்

தவெக நீா், மோா் பந்தல் திறப்பு

அரக்கோணத்தில் தவெகவினா் அன்னதானம்: அமைச்சா் பங்கேற்பு

தொண்டியில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

