ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானத்தை கூட்டுறவுத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான வி.காந்தி ராஜ் தொடங்கி வைத்தாா்.
தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட வேண்டும் எனவும் அந்நாளில் ஏழை எளியோா் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தவெகவினா் உணவு வழங்க வேண்டும் எனவும் தவெக தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தாா்.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வை முன்னிட்டு அப்பகுதியில் பந்தல்கள் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் தொடங்கி வைத்தாா்.
இதில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்டோா் உண்டதாக கட்சியினா் தெரிவித்தனா்.
இந்நிகழ்வில் தவெக அரக்கோணம் நகர செயலா் ரமேஷ் மற்றும் அரக்கோணம், சோளிங்கா் பகுதி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உர விநியோக செயலி பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தவெக நீா், மோா் பந்தல் திறப்பு

அரக்கோணம் அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் உண்ணாவிரதப் போராட்டம்

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் காந்திராஜ் திறந்து வைத்தாா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

