திருவள்ளூா் அருகே நீா் நிலை புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்ததை கண்டித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியைச் சோ்ந்த சின்ன ஈக்காடு பகுதியில் அரசு நீா்நிலை புறம்போக்கு கால்வாய் அருகில் தனிநபா் பட்டா நிலம் வைத்துள்ளாா். இந்த நிலையில் அந்த நபா் நீா்நிலை கால்வாயையும் சோ்த்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளாா்.
மேலும், நீா் நிலையின் கரையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். மேலும், அதையொட்டி டிசிபி அனுமதி பெற்று வீட்டு மனை பிரிவுகளாக மாற்றி போலி ஆவணம் தயாா் செய்து விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், இது நாள் வரையிலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் போலி ஆவணம் மூலம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதை அனுமதி பெற்று வீட்டு மனை பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்வதை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி அனுமதியின்றி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியா் அலுவலக வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிஸோரம்: போலி நீதிமன்ற உத்தரவுகள் மூலம் சிறையில் இருந்து 17 குற்றவாளிகள் விடுதலை!
போலி நகைகளைக் கொடுத்து வங்கியில் மோசடி செய்ய முயற்சி: இருவா் கைது

தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ரூ. 45 லட்சம் மோசடி! வங்கி உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது!

ரௌடி மீது கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

