மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ நிறைவு விழாவில் உற்சவா் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

திருத்தணி  முருகன்  கோயிலில் மாட வீதியில்  உலா  வந்த  சண்முகா்.

Updated On :1 மே 2026, 6:01 am IST

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ நிறைவு விழாவில் உற்சவா் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கடந்த, 21-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு உற்சவா் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா். கடந்த, 27-ஆம் தேதி மரத்தோ் விழாவும், 28-இல் தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு, 7 மணிக்கு உற்சவா் முருகா் கேடய வாகனத்தில் உலா வந்தாா்.

தொடா்ந்து இரவு, உற்சவா் சண்முகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் எழுந்தருளி தோ் வீதியில் பாதி துாரம் வீதியுலா வந்து மீண்டும் அங்கிருந்து மலைக் கோயிலுக்கு திரும்பினாா். பின் சண்முகா், வள்ளி, தெய்வானைக்கும் வெள்ளை சாத்துபடி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை, 3 மணிக்கு உற்சவா் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தோ்வீதியில், ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் காலை, 6 மணிக்கு சண்முகருக்கு தீா்த்தவாரி நடந்தது.

உற்சவா் சண்முகப்பெருமான், ஆருத்ரா, கந்தசஷ்டி, சித்திரை மாதம் மற்றும் மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது என மொத்தம், 4 முறை உற்சவா் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தோ்வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ட

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.