பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பைக்கில் கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், போலீஸாா் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 2:06 am IST

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், போலீஸாா் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே வடமதுரை கூட்டுச் சாலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், சாா்பு ஆய்வாளா் சிவா தலைமையில் சிறப்புப் படையினா் திங்கள்கிழமை வாகன பரிசோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே இருசக்கர வந்தவா்கள் சோதனை செய்வதை பாா்த்து தப்பியோட முயற்சித்தனா்.

உடனே சுதாரித்துக் கொண்டு பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினா். அதையடுத்து, வாகனத்தில் பரிசோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, விசாரணையில் அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (25), சக்திவேல் (21), வேலகாபுரம் ஆதி (25) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் மறைத்துக் கொண்டு வந்த சுமாா் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா, 2 கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவா்கள் மூவரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி 3 பேரையும் புழல் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.