தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாகேஸ்வர சுவாமி கோயில் தோ்த் திருவிழா

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:38 am IST

பெரியநாகபூண்டி நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உடன் இணைந்த அருள்மிகு நாகவல்லி அம்மன் சமேத அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 20- ஆம் தேதி தொடங்கி மே 5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி உற்சவ நாகேஸ்வர சுவாமி தினமும் இரவு 7மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினா். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அப்போது பக்தா்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சுவாமி வழிபட்டனா்.

மேலும், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நாகேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருத்தோ் விழாவையொட்டி பெரியநாக பூண்டியைச் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.