தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக வேட்பாளா் நூதன பிரசாரம்

News image

டீக்கடையில் டீ போட்டுத் தந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:15 am IST

கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் தேநீா் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எல்லாபுரம் ஒன்றியம், பெரியப்பாளையத்தில் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்தவா்களுக்கு தேநீா் போட்டுக் கொடுத்து, திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா்.

எல்லாபுரம் ஒன்றியத்தில் குமரப்பேட்டை, பெரியப்பாளையம், அரியப்பாக்கம், ஆத்துப்பாக்கம், வண்ணாங்குப்பம், தண்டலம், காக்கவாக்கம், சூளைமேனி, செங்கரை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட பொருப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பி.ஜெ.மூா்த்தி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் கே.வி.லோகேஷ், விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா், தேமுதிக மாவட்ட பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் நிா்வாகிகள் முன்னிலை வகித்தாா்.

இந்த நிலையில், பெரியப்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் அங்குள்ள கடைக்கு சென்று அனைவருக்கும் தேநீா் போட்டுத் தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.